செய்திகள்
மயிலாடுதுறையில் சிறுமி கடத்தல்- போலீசார் விசாரணை
மயிலாடுதுறையில் 16 வயது சிறுமி கடத்தப்பட்டது குறித்து பெற்றோர் போலீசில் புகார் செய்தனர். போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மயிலாடுதுறை:
மயிலாடுதுறை பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமி ஒருவர் 10-ம் வகுப்பு படித்து விட்டு வீட்டிலேயே இருந்து வந்தார். கடந்த 7-ந் தேதி வீட்டில் இருந்த சிறுமியை திடீரென காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் பல்வேறு இடங்களில் சிறுமியை தேடினர். எங்கு தேடியும் அவர் கிடைக்கவில்லை.
இதையடுத்து சிறுமியின் பெற்றோர் மயிலாடுதுறை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் அனைத்து மகளிர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் கோப்பெருந்தேவி மற்றும் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் சிறுமி வீட்டில் இருந்தபோது செல்போனில் பேசிய ஒருவர் சிறுமியை தான் படிக்க வைப்பதாகவும், மேலும் பல ஆசை வார்த்தைகளை கூறியும் அந்த சிறுமியை கடத்தி சென்றதாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.