செய்திகள்
கைது

குத்தாலம் அருகே காரில் கடத்தப்பட்ட 1,100 லிட்டர் சாராயம் பறிமுதல்- வாலிபர் கைது

Published On 2021-02-09 16:36 IST   |   Update On 2021-02-09 16:36:00 IST
குத்தாலம் அருகே காரில் கடத்தப்பட்ட 1,100 லிட்டர் சாராயம் கடத்திய வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
குத்தாலம்:

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே உள்ள ஸ்ரீகண்டபுரம் வழியாக புதுச்சேரியில் இருந்து சாராயம் காரில் கடத்தி வரப்படுவதாக பாலையூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் பாலையூர் போலீசார் ஸ்ரீகண்டபுரம் கடைத்தெருவில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்ததில் அதில் 1,100 லிட்டர் சாராயம் 11 ஆயிரம் பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்டு கடத்தி வரப்பட்டது தெரியவந்தது. இதனை தொடர்ந்து கார் மற்றும் சாராயத்தை பறிமுதல் செய்த போலீசார் காரை ஓட்டிவந்த வழுவூர் நெய்க்குப்பை தோப்பு தெருவை சேர்ந்த நடேசன் மகன் ராம்கி (வயது33) என்பவரை கைது செய்தனர்.

Similar News