செய்திகள்
ஆட்டோ டிரைவரின் தகவலால் விருதுநகரில் இரிடியம் மோசடி கும்பல் சிக்கியது - 11 பேர் கைது
விருதுநகர் அருகே ஆட்டோ டிரைவர் கொடுத்த தகவலின்பேரில் இரிடியம் மோசடி கும்பலை சேர்ந்த 11 பேர் கைது செய்யப்பட்டனர்.
விருதுநகர்:
விருதுநகர் அருகே உள்ள செங்குன்றாபுரத்தை சேர்ந்தவர் ஆட்டோ டிரைவர் முத்துக்குமார் (வயது 35). இவர் தனது ஆட்டோவில் பெயிண்ட் அடிப்பதற்காக விருதுநகர்-சிவகாசி ரோட்டில் உள்ள ஒரு தொழிற்கூடத்திற்கு தனது நண்பர் கருப்பையா என்பவருடன் வந்தார்.
ஆட்டோவை தொழிற்கூடத்தில் விட்டு, விட்டு அங்குள்ள டீக்கடையில் நண்பருடன் டீ சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது அருகில் பார்த்தால் அடையாளம் சொல்லக்கூடிய 2 பேர் டீ குடித்துக் கொண்டிருந்தனர்.
அவர்கள் இருவரும் தாங்கள் வைத்துள்ள பானையில் இரிடியம் இருப்பதாக கூறி அதை வாங்க வரும் நபரிடம் கோடி ரூபாய்க்கு மேல் விற்பனை செய்து விட்டு தப்பி விடலாம் என்று பேசிக் கொண்டிருந்ததை முத்துக்குமார் கேட்டுவிட்டார்.
பின்னர் அவர்கள் 2 பேரும் அருகில் விடுதி முன் நின்று கொண்டிருந்த சொகுசுகாரை நோக்கி சென்று விட்டனர். இதுபற்றி முத்துக்குமார், ஆமத்தூர் போலீசில் புகார் செய்தார். இதைத்தொடர்ந்து சுதாரித்துக்கொண்ட போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
இந்தநிலையில் போலீசார் சிவகாசி ரோட்டில் உள்ள விடுதிகளில் திடீர் சோதனை நடத்தினர். அப்போது ஒரு விடுதி அறையில் சந்தேகத்திற்கிடமான வகையில் கும்பல் பதுங்கியிருப்பது தெரியவந்தது.
அவர்களிடம் விசாரணை நடத்திய போது அவர்கள் அனைவரும் நாகர்கோவில், நெல்லை, தூத்துக்குடி, ஹைதராபாத், பெங்களூரு உள்பட பல்வேறு பகுதிகளை சேர்ந்தவர்கள் என்பதும், அவர்கள் ஏதோ ஒரு மோசடி செய்ய பதுங்கியிருப்பதும் தெரியவந்தது.
இதனை தொடர்ந்து போலீசார் அவர்கள் தங்கியிருந்த அறையை சோதனை செய்தபோது அதில் ஒரு பையில் ஒரு கோபுர கலசம் வைக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது.
அதனை பறிமுதல் செய்த போலீசார் அந்த கும்பலிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அவர்கள் தாங்கள் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள பாப்பாத்தி அம்மன் கோவிலில் இருந்த கோபுர கலசத்தை அந்த பகுதியை சேர்ந்த குப்புசாமி என்பவர் உதவியோடு திருடியதாகவும், அதனை ரூ.1 கோடிக்கு மேல் விற்பனை செய்வதற்காக விருதுநகரில் விடுதியில் தங்கி இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.
இதனைத்தொடர்ந்து போலீசார் அந்த கோபுர கலசத்தை தடய அறிவியல் நிபுணர்கள் மூலம் ஆய்வுக்கு ஏற்பாடு செய்தனர். ஆய்வில் அந்த கோபுர கலசத்தில் இரிடியம் எதுவும் இல்லை என தெரிய வந்தது.
மோசடியாக அந்த கோபுர கலசத்தை இரிடியம் இருப்பதாக கூறி கோடிக்கணக்கான பணத்திற்கு விற்பனை செய்ய அவர்கள் முயற்சித்துள்ளது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து போலீசார் அந்த கும்பலில் இருந்த ஹைதராபாத்தை சேர்ந்த கணேஷ் (51), நாகர்கோவிலை சேர்ந்த ஜோசப் டேவிஸ் (63), ெகாடைக்கானலை சேர்ந்த குப்புசாமி (38), பெங்களூரை சேர்ந்த ராம்பிரசாத் (38), பழனியை சேர்ந்த வினோஜ் (29), ஸ்ரீவைகுண்டத்தை சேர்ந்த சதீஷ்குமார் (29), கொடைக்கானலை சேர்ந்த கருப்பையா (29), நெல்லை மாவட்டம் நடுசாைல புதூரை சேர்ந்த பொன்னரசு (46), நாகர்கோவிலை சேர்ந்த டோமினிக் சேவியர் (45), ஸ்ரீவைகுண்டத்தை சேர்ந்த சாத்தக்குட்டி என்ற சதீஷ் (27), பாளையங்கோட்டையை சேர்ந்த ஜோசப்கென்னடி (52) ஆகிய 11 பேரை ைகது செய்தனர்.
மேலும் இந்த கும்பலுடன் விருதுநகரைச் சேர்ந்த யாருக்கும் தொடர்பு உள்ளதா? என்பது குறித்தும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருதுநகர் அருகே உள்ள செங்குன்றாபுரத்தை சேர்ந்தவர் ஆட்டோ டிரைவர் முத்துக்குமார் (வயது 35). இவர் தனது ஆட்டோவில் பெயிண்ட் அடிப்பதற்காக விருதுநகர்-சிவகாசி ரோட்டில் உள்ள ஒரு தொழிற்கூடத்திற்கு தனது நண்பர் கருப்பையா என்பவருடன் வந்தார்.
ஆட்டோவை தொழிற்கூடத்தில் விட்டு, விட்டு அங்குள்ள டீக்கடையில் நண்பருடன் டீ சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது அருகில் பார்த்தால் அடையாளம் சொல்லக்கூடிய 2 பேர் டீ குடித்துக் கொண்டிருந்தனர்.
அவர்கள் இருவரும் தாங்கள் வைத்துள்ள பானையில் இரிடியம் இருப்பதாக கூறி அதை வாங்க வரும் நபரிடம் கோடி ரூபாய்க்கு மேல் விற்பனை செய்து விட்டு தப்பி விடலாம் என்று பேசிக் கொண்டிருந்ததை முத்துக்குமார் கேட்டுவிட்டார்.
பின்னர் அவர்கள் 2 பேரும் அருகில் விடுதி முன் நின்று கொண்டிருந்த சொகுசுகாரை நோக்கி சென்று விட்டனர். இதுபற்றி முத்துக்குமார், ஆமத்தூர் போலீசில் புகார் செய்தார். இதைத்தொடர்ந்து சுதாரித்துக்கொண்ட போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
இந்தநிலையில் போலீசார் சிவகாசி ரோட்டில் உள்ள விடுதிகளில் திடீர் சோதனை நடத்தினர். அப்போது ஒரு விடுதி அறையில் சந்தேகத்திற்கிடமான வகையில் கும்பல் பதுங்கியிருப்பது தெரியவந்தது.
அவர்களிடம் விசாரணை நடத்திய போது அவர்கள் அனைவரும் நாகர்கோவில், நெல்லை, தூத்துக்குடி, ஹைதராபாத், பெங்களூரு உள்பட பல்வேறு பகுதிகளை சேர்ந்தவர்கள் என்பதும், அவர்கள் ஏதோ ஒரு மோசடி செய்ய பதுங்கியிருப்பதும் தெரியவந்தது.
இதனை தொடர்ந்து போலீசார் அவர்கள் தங்கியிருந்த அறையை சோதனை செய்தபோது அதில் ஒரு பையில் ஒரு கோபுர கலசம் வைக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது.
அதனை பறிமுதல் செய்த போலீசார் அந்த கும்பலிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அவர்கள் தாங்கள் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள பாப்பாத்தி அம்மன் கோவிலில் இருந்த கோபுர கலசத்தை அந்த பகுதியை சேர்ந்த குப்புசாமி என்பவர் உதவியோடு திருடியதாகவும், அதனை ரூ.1 கோடிக்கு மேல் விற்பனை செய்வதற்காக விருதுநகரில் விடுதியில் தங்கி இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.
இதனைத்தொடர்ந்து போலீசார் அந்த கோபுர கலசத்தை தடய அறிவியல் நிபுணர்கள் மூலம் ஆய்வுக்கு ஏற்பாடு செய்தனர். ஆய்வில் அந்த கோபுர கலசத்தில் இரிடியம் எதுவும் இல்லை என தெரிய வந்தது.
மோசடியாக அந்த கோபுர கலசத்தை இரிடியம் இருப்பதாக கூறி கோடிக்கணக்கான பணத்திற்கு விற்பனை செய்ய அவர்கள் முயற்சித்துள்ளது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து போலீசார் அந்த கும்பலில் இருந்த ஹைதராபாத்தை சேர்ந்த கணேஷ் (51), நாகர்கோவிலை சேர்ந்த ஜோசப் டேவிஸ் (63), ெகாடைக்கானலை சேர்ந்த குப்புசாமி (38), பெங்களூரை சேர்ந்த ராம்பிரசாத் (38), பழனியை சேர்ந்த வினோஜ் (29), ஸ்ரீவைகுண்டத்தை சேர்ந்த சதீஷ்குமார் (29), கொடைக்கானலை சேர்ந்த கருப்பையா (29), நெல்லை மாவட்டம் நடுசாைல புதூரை சேர்ந்த பொன்னரசு (46), நாகர்கோவிலை சேர்ந்த டோமினிக் சேவியர் (45), ஸ்ரீவைகுண்டத்தை சேர்ந்த சாத்தக்குட்டி என்ற சதீஷ் (27), பாளையங்கோட்டையை சேர்ந்த ஜோசப்கென்னடி (52) ஆகிய 11 பேரை ைகது செய்தனர்.
மேலும் இந்த கும்பலுடன் விருதுநகரைச் சேர்ந்த யாருக்கும் தொடர்பு உள்ளதா? என்பது குறித்தும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.