செய்திகள்
கோப்புபடம்

பொன்னமராவதி அருகே தூக்குப்போட்டு வியாபாரி தற்கொலை

Published On 2021-02-01 14:07 GMT   |   Update On 2021-02-01 14:07 GMT
பொன்னமராவதி அருகே தூக்குப்போட்டு வியாபாரி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பொன்னமராவதி:

பொன்னமராவதி அருகே வலையப்பட்டி மலையாண்டி கோவில் பகுதியில் வசித்து வரும் பழனியப்பன் மகன் வள்ளியப்பன் (வயது 30). முறுக்கு வியாபாரியான இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் ஒரு குழந்தை உள்ளனர். குடும்ப பிரச்சினை காரணமாக இவரது மனைவி கோபித்துக் கொண்டு சென்று விட்டதாக கூறப்படுகிறது. 

குடும்ப நடத்த வருமாறு வள்ளியப்பன் மனைவியை அழைத்தும் அவர் வரவில்லை என்று தெரிகிறது. இதனால், வாழ்க்கையில் விரக்தி அடைந்த அவர், பொன்னமராவதி அருகே உள்ள செம்பொட்டல் பகுதியில் உள்ள மரக்கிளையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த பொன்னமராவதி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று வள்ளியப்பனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வலையப்பட்டி பாப்பாயி ஆச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News