செய்திகள்
சாலை விபத்து

கிருஷ்ணகிரி அருகே சோகம் - சாலை விபத்தில் 6 பேர் பலி

Published On 2021-02-01 00:46 GMT   |   Update On 2021-02-01 00:46 GMT
கிருஷ்ணகிரி அருகே சாலையோரம் நின்றிருந்த பேருந்து மீது வேன் மோதிய விபத்தில் 6 பேர் பலியாகினர்.
கிருஷ்ணகிரி:

கிருஷ்ணகிரி அருகே காவிரிப்பட்டணம் என்ற இடத்தில் சாலையோரம் நின்ற அரசு பேருந்து மீது வேன் மோதியது.

இந்த விபத்தில் 6 பேர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். உயிரிழந்த அனைவரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என தகவல் வெளியாகியுள்ளது.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற போலீசார், இறந்தவர்கள் உடலை மீட்டு விசாரணைநடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News