செய்திகள்
கொத்து கொத்தாக பழுத்து தொங்கும் காபி பழங்கள்
கோத்தகிரி பகுதியில் கொத்து கொத்தாக காபி பழங்கள் பழுத்து தொங்குகின்றன. இதனால் அறுவடை செய்யும் பணியில் விவசாயிகள் தீவிரம் அடைந்து உள்ளனர்.
கோத்தகிரி:
நீலகிரி மாவட்டத்தின் பிரதான தொழிலாக தேயிலை விவசாயம் விளங்குகிறது. இருப்பினும் கோத்தகிரி மற்றும் அதை சுற்றி உள்ள அரவேனு, கீழ்த்தட்டப்பள்ளம், குஞ்சப்பனை, கரிக்கையூர், செம்மனாரை, உள்பட ஏராளமான ஆதிவாசி கிராமங்களில் விவசாயிகள் தங்களது தேயிலை தோட்டங்களில் ஊடுபயிராக காபி சாகுபடி செய்து உள்ளனர். இந்த காபி செடிகளில் ஆண்டிற்கு 2 முறை அறுவடை செய்யலாம்.
இந்த நிலையில் தற்போது அறுவடை காலமாக உள்ளது. இந்த முறை காபி செடிகளில் விளைச்சல் அதிகமாக உள்ளது. இதனால் சிவப்பு நிறங்களில் காபி பழங்கள் செடிகளில் கொத்து கொத்தாக பழுத்து தொங்குகின்றன. எனவே விவசாயிகள் காபி பழங்களை அறுவடை செய்வதில் தீவிரம் காட்டி வருகின்றனர்.
இதுகுறித்து காபி சாகுபடி செய்த விவசாயிகள் கூறியதாவது:-
கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் 100-க்கும் மேற்பட்ட ஏக்கரில் காபி ஊடுபயிராக சாகுபடி செய்யப்பட்டு உள்ளது. பரவலாக மழை பெய்து வந்ததால் நல்ல விளைச்சல் ஏற்பட்டு உள்ளது. காபி பழங்களை ஆண்டுக்கு 2 முறை அறுவடை செய்யலாம். அறுவடை சீசனில் 20 நாட்களுக்கு ஒரு முறை செடியில் காய்த்து உள்ள பழங்களை அறுவடை செய்ய வேண்டும். நல்ல விளைச்சல் இருந்தால் ஒரு செடியில் அதிகபட்சமாக 8 கிலோ பழங்கள் வரை கிடைக்கும். ஒரு கிலோ காபி பழங்கள் ரூ.120 முதல் ரூ.150 வரை விற்கப்படுகிறது.
இந்த பழங்களை வாங்கி செல்லும் வியாபாரிகள் அதன் தோலை நீக்கி உலர வைத்து காபி கொட்டைகளாக மாற்றி வெளி மார்க்கெட்டில் விற்பனை செய்கிறார்கள். இதன் மூலம் காபி பொடி தயாரிக்கும்போது ஒரு கிலோ காபி பொடிக்கு ரூ.400 முதல் ரூ.500 வரை விலை கிடைக்கும். தற்போது காபி விளைச்சல் அதிகமாக உள்ளதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
நீலகிரி மாவட்டத்தின் பிரதான தொழிலாக தேயிலை விவசாயம் விளங்குகிறது. இருப்பினும் கோத்தகிரி மற்றும் அதை சுற்றி உள்ள அரவேனு, கீழ்த்தட்டப்பள்ளம், குஞ்சப்பனை, கரிக்கையூர், செம்மனாரை, உள்பட ஏராளமான ஆதிவாசி கிராமங்களில் விவசாயிகள் தங்களது தேயிலை தோட்டங்களில் ஊடுபயிராக காபி சாகுபடி செய்து உள்ளனர். இந்த காபி செடிகளில் ஆண்டிற்கு 2 முறை அறுவடை செய்யலாம்.
இந்த நிலையில் தற்போது அறுவடை காலமாக உள்ளது. இந்த முறை காபி செடிகளில் விளைச்சல் அதிகமாக உள்ளது. இதனால் சிவப்பு நிறங்களில் காபி பழங்கள் செடிகளில் கொத்து கொத்தாக பழுத்து தொங்குகின்றன. எனவே விவசாயிகள் காபி பழங்களை அறுவடை செய்வதில் தீவிரம் காட்டி வருகின்றனர்.
இதுகுறித்து காபி சாகுபடி செய்த விவசாயிகள் கூறியதாவது:-
கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் 100-க்கும் மேற்பட்ட ஏக்கரில் காபி ஊடுபயிராக சாகுபடி செய்யப்பட்டு உள்ளது. பரவலாக மழை பெய்து வந்ததால் நல்ல விளைச்சல் ஏற்பட்டு உள்ளது. காபி பழங்களை ஆண்டுக்கு 2 முறை அறுவடை செய்யலாம். அறுவடை சீசனில் 20 நாட்களுக்கு ஒரு முறை செடியில் காய்த்து உள்ள பழங்களை அறுவடை செய்ய வேண்டும். நல்ல விளைச்சல் இருந்தால் ஒரு செடியில் அதிகபட்சமாக 8 கிலோ பழங்கள் வரை கிடைக்கும். ஒரு கிலோ காபி பழங்கள் ரூ.120 முதல் ரூ.150 வரை விற்கப்படுகிறது.
இந்த பழங்களை வாங்கி செல்லும் வியாபாரிகள் அதன் தோலை நீக்கி உலர வைத்து காபி கொட்டைகளாக மாற்றி வெளி மார்க்கெட்டில் விற்பனை செய்கிறார்கள். இதன் மூலம் காபி பொடி தயாரிக்கும்போது ஒரு கிலோ காபி பொடிக்கு ரூ.400 முதல் ரூ.500 வரை விலை கிடைக்கும். தற்போது காபி விளைச்சல் அதிகமாக உள்ளதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.