செய்திகள்
தனியார் நிறுவன ஊழியர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சூளகிரி:
ஓசூர் தாலுகா புக்கசாகரம் அருகே உள்ள எப்ரி கிராமத்தை சேர்ந்தவர் ராமமூர்த்தி (வயது 24). தனியார் நிறுவன ஊழியர். இந்த நிலையில் அவரது தந்தை, இவருக்கு தெரியாமல் சொத்துக்களை விற்றதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த ராமமூர்த்தி வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்த புகாரின்பேரில், ஓசூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.