செய்திகள்
விபத்து பலி

மினி வேன் மோதி தொழிலாளி பலி

Published On 2021-01-30 09:31 GMT   |   Update On 2021-01-30 09:31 GMT
மினி வேன் மோதி தொழிலாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
காவேரிப்பட்டணம்:

காவேரிப்பட்டணத்தை அடுத்த சீகலஅள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் ரவி (வயது 32). கூலித்தொழிலாளி. இவர், மோட்டார்சைக்கிளில் கதிரிபுரம் பஸ் நிறுத்தம் அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த ஒரு மினி வேன் மோட்டார் சைக்கிள் மீது மோதிவிட்டு, சாலையோரம் நடந்த சென்ற கருக்கன்சாவடி பகுதியை சேர்ந்த துரை (40) என்பவர் மீதும் மோதியது. இந்த விபத்தில் ரவி மற்றும் துரை ஆகிய 2 பேரும் படுகாயம் அடைந்தனர். அவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு, காவேரிப்பட்டணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே ரவி பரிதாபமாக இறந்தார். துரை, கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்து குறித்து காவேரிப்பட்டணம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடாசலம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Tags:    

Similar News