செய்திகள்
கிருஷ்ணகிரி அருகே வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை
கிருஷ்ணகிரி அருகே வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரியை அடுத்த பாலகுறி கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தராஜ் (வயது 19). இவர் ராயக்கோட்டையில் உள்ள கோழிக்கறி கடையில் வேலை செய்து வந்தார். இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்து வந்தது. இந்த நிலையில் கடந்த ஒரு வாரமாக இவர் வேலைக்கு செல்லவில்லை. இதனால் மது குடிக்க பணம் இல்லாததால் மனமுடைந்து காணப்பட்ட கோவிந்தராஜ் வெப்பாளம்பட்டியில் உள்ள மாந்தோப்பில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து கிருஷ்ணகிரி தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.