செய்திகள்
விருதுநகர் மாவட்டத்தில் மேலும் 4 பேருக்கு கொரோனா
விருதுநகர் மாவட்டத்தில் மேலும் 4 பேருக்கு நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில் பாதிப்பு எண்ணிக்கை 16 ஆயிரத்து 549 ஆக உயர்ந்துள்ளது.
விருதுநகர்:
மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 3 லட்சத்து 91 ஆயிரத்து 33 பேருக்கு மருத்துவ பரிசோதனை செய்ததில் 16,545 பேருக்கு நோய் பாதிப்பு ஏற்பட்டு இருந்தது. 16,290 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினர். 24 பேர் அரசு ஆஸ்பத்திரி களில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். வீடுகளில் யாரும் தனிமைப்படுத்தப்படவில்லை.
மாவட்டத்தில் மேலும் 4 பேருக்கு நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில் பாதிப்பு எண்ணிக்கை 16 ஆயிரத்து 549 ஆக உயர்ந்துள்ளது. ஆயிரத்து 110 பேருக்கு மருத்துவ பரிசோதனை செய்த நிலையில் ஆயிரத்து 633 பேரின் மருத்துவ பரிசோதனை முடிவுகள் அறிவிக்கப்படவில்லை. தொடர்ந்து மாவட்டத்தில் மருத்துவ பரிசோதனை முடிவுகளை அறிவிப்பதில் தாமதம் ஏற்பட்டு வருகிறது.