செய்திகள்
ஊட்டி தேயிலை பூங்காவில் கோடை சீசனுக்காக 1½ லட்சம் மலர் செடிகள் நடவு
ஊட்டி தேயிலை பூங்காவில் கோடை சீசனுக்காக 1½ லட்சம் மலர் செடிகள் நடவு செய்யப்பட்டு வருகிறது.
ஊட்டி:
நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகே உள்ள தொட்டபெட்டாவில் தோட்டக்கலைத்துறை கட்டுப்பாட்டில் தேயிலை பூங்கா செயல்பட்டு வருகிறது. இது 10½ ஏக்கர் பரப்பளவில் பூங்கா இயற்கை எழில் மிகுந்த சூழலில் ரம்மியமாக காட்சி அளிக்கிறது. இங்கு நீலகிரியின் முக்கிய பொருளாதாரமாக விளங்கும் தேயிலை விவசாயத்தை பிரபலப்படுத்தும் வகையில் தேயிலை தோட்டங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. நடைபாதை வழியாக சுற்றுலா பயணிகள் நடந்து சென்று தேயிலை செடிகளை பார்வையிடவும், அதன் நடுவே உள்ள நிழற்குடைகளில் ஓய்வெடுக்கவும் வழிவகை செய்யப்பட்டு இருக்கிறது. அவர்கள் தேயிலை தோட்டத்தின் நடுவே புகைப்படம் எடுத்து மகிழ்கிறார்கள்.
அங்கு பச்சை தேயிலை பறிப்பது, எவ்வாறு கிரீன் டீ உற்பத்தி செய்யப்படுகிறது என்பதை கேட்டு தெரிந்து கொள்கின்றனர். மேலும் அங்கு உற்பத்தி செய்யப்படும் கிரீன் டீயை ஆர்வத்துடன் வாங்கி செல்கின்றனர். சுற்றுலா பயணிகளின் குழந்தைகள் விளையாடுவதற்காக விளையாட்டு உபகரணங்கள் உள்ளன. தேயிலை பூங்காவுக்கு ஆண்டுதோறும் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து வருகிறது. வருகிற ஏப்ரல், மே மாதங்களில் கோடை சீசன் நடைபெற உள்ளது. இதையொட்டி பூங்காவுக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் பல்வேறு வகையான மலர் செடிகள் நடவு செய்யப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் நடைபாதை ஓரங்கள், மலர் பாத்திகள், தேயிலை தோட்டங்கள் மற்றும் நிழற்குடைகளை சுற்றிலும் மலர் செடிகள் நடவு செய்யும் பணி தொடங்கி உள்ளது. ஏற்கனவே நர்சரியில் வளர்த்து பராமரிக்கப்பட்ட மலர் செடிகளை பணியாளர்கள் நடவு செய்து வருகின்றனர். மேரிகோல்டு, டெல்பீனியம், சால்வியா, ஆஸ்டர், கேலண்டுலா, பால்சம், டெய்சி, டையான்தஸ், பேன்சி டீலக்ஸ், வெர்பினா உள்பட 25 ரகங்களை சேர்ந்த 1 லட்சத்து 50 ஆயிரம் மலர் செடிகள் நடவு செய்யப்பட்டு வருகிறது.
தொடர் உறைபனி காரணமாக மலர் மற்றும் அலங்கார செடிகள் பாதிக்காமல் இருக்க கோத்தாரி செடிகளை கொண்டு பாதுகாக்கப்படுகிறது. தற்போது நடவு செய்யப்படும் செடிகளில் வருகிற ஏப்ரல் மாதம் பூக்கள் பூக்க தொடங்கும். அவை அப்போது வருகை தரும் சுற்றுலா பயணிகளை கவர இருக்கிறது.
நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகே உள்ள தொட்டபெட்டாவில் தோட்டக்கலைத்துறை கட்டுப்பாட்டில் தேயிலை பூங்கா செயல்பட்டு வருகிறது. இது 10½ ஏக்கர் பரப்பளவில் பூங்கா இயற்கை எழில் மிகுந்த சூழலில் ரம்மியமாக காட்சி அளிக்கிறது. இங்கு நீலகிரியின் முக்கிய பொருளாதாரமாக விளங்கும் தேயிலை விவசாயத்தை பிரபலப்படுத்தும் வகையில் தேயிலை தோட்டங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. நடைபாதை வழியாக சுற்றுலா பயணிகள் நடந்து சென்று தேயிலை செடிகளை பார்வையிடவும், அதன் நடுவே உள்ள நிழற்குடைகளில் ஓய்வெடுக்கவும் வழிவகை செய்யப்பட்டு இருக்கிறது. அவர்கள் தேயிலை தோட்டத்தின் நடுவே புகைப்படம் எடுத்து மகிழ்கிறார்கள்.
அங்கு பச்சை தேயிலை பறிப்பது, எவ்வாறு கிரீன் டீ உற்பத்தி செய்யப்படுகிறது என்பதை கேட்டு தெரிந்து கொள்கின்றனர். மேலும் அங்கு உற்பத்தி செய்யப்படும் கிரீன் டீயை ஆர்வத்துடன் வாங்கி செல்கின்றனர். சுற்றுலா பயணிகளின் குழந்தைகள் விளையாடுவதற்காக விளையாட்டு உபகரணங்கள் உள்ளன. தேயிலை பூங்காவுக்கு ஆண்டுதோறும் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து வருகிறது. வருகிற ஏப்ரல், மே மாதங்களில் கோடை சீசன் நடைபெற உள்ளது. இதையொட்டி பூங்காவுக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் பல்வேறு வகையான மலர் செடிகள் நடவு செய்யப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் நடைபாதை ஓரங்கள், மலர் பாத்திகள், தேயிலை தோட்டங்கள் மற்றும் நிழற்குடைகளை சுற்றிலும் மலர் செடிகள் நடவு செய்யும் பணி தொடங்கி உள்ளது. ஏற்கனவே நர்சரியில் வளர்த்து பராமரிக்கப்பட்ட மலர் செடிகளை பணியாளர்கள் நடவு செய்து வருகின்றனர். மேரிகோல்டு, டெல்பீனியம், சால்வியா, ஆஸ்டர், கேலண்டுலா, பால்சம், டெய்சி, டையான்தஸ், பேன்சி டீலக்ஸ், வெர்பினா உள்பட 25 ரகங்களை சேர்ந்த 1 லட்சத்து 50 ஆயிரம் மலர் செடிகள் நடவு செய்யப்பட்டு வருகிறது.
தொடர் உறைபனி காரணமாக மலர் மற்றும் அலங்கார செடிகள் பாதிக்காமல் இருக்க கோத்தாரி செடிகளை கொண்டு பாதுகாக்கப்படுகிறது. தற்போது நடவு செய்யப்படும் செடிகளில் வருகிற ஏப்ரல் மாதம் பூக்கள் பூக்க தொடங்கும். அவை அப்போது வருகை தரும் சுற்றுலா பயணிகளை கவர இருக்கிறது.