செய்திகள்
கோப்புபடம்

மது குடிக்க மனைவி பணம் தராததால் தகராறு: கட்டிட மேஸ்திரி தீக்குளித்து தற்கொலை

Published On 2021-01-28 07:02 GMT   |   Update On 2021-01-28 07:02 GMT
சாமல்பட்டி அருகே மது குடிக்க மனைவி பணம் கொடுக்காததால் ஏற்பட்ட தகராறில் கட்டிட மேஸ்திரி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
ஊத்தங்கரை:

கிருஷ்ணகிரி மாவட்டம் சாமல்பட்டி அருகே உள்ள நார்லபள்ளியை சேர்ந்தவர் மாதேஸ்வரன் (வயது 32). கட்டிட மேஸ்திரி. இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்து வந்தது. சம்பவத்தன்று இவர் மனைவியிடம் மது குடிக்க பணம் கேட்டுள்ளார்.

ஆனால் அவர் கொடுக்க மறுத்து விட்டதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்த மாதேஸ்வரன் உடலில் மண்எண்ணெயை ஊற்றி தீ வைத்துக் கொண்டார். உடல் கருகிய அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

பின்னர் அவரரை மேல்சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி மாதேஸ்வரன் பரிதாபமாக இறந்தார். கட்டிட மேஸ்திரி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக சாமல்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News