செய்திகள்
அரியலூரில் ஒருவருக்கு கொரோனா தொற்று- பெரம்பலூரில் பாதிப்பு இல்லை
அரியலூர் மாவட்டத்தில் நேற்று ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. பெரம்பலூரில் யாருக்கும் தொற்று பாதிப்பு இல்லை.
அரியலூர்:
அரியலூர் மாவட்டத்தில் நேற்று ஜெயங்கொண்டம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் நேற்று ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,677 ஆக உயர்ந்துள்ளது.
இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 4,605 பேர் வீடு திரும்பியுள்ளனர். 49 பேர் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளனர். நேற்று மொத்தம் 172 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று யாரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்படவில்லை.