செய்திகள்
உயிரிழப்பு

உத்திரமேரூரில் ஏரியில் மூழ்கி சிறுவன் உயிரிழப்பு

Published On 2021-01-27 03:18 GMT   |   Update On 2021-01-27 03:18 GMT
உத்திரமேரூரில் ஏரியில் மூழ்கி சிறுவன் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
உத்திரமேரூர்:

சென்னை வளசரவாக்கம் அன்பு நகரை சேர்ந்தவர் கமல்தாஸ். இவர் காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் பேரூராட்சியில் உள்ள உறவினர் சிவகுமார் வீட்டு கிரகபபிரவேசத்திற்கு குடும்பத்தினருடன் சென்றார். இவரது மகன் மோனிஷ் (வயது 10). நேற்று மாலை மோனிஷ் உத்திரமேரூர் ஏரியில் நண்பர்களுடன் குளிக்க சென்றான். அப்போது எதிர்பாராதவிதமாக மோனிஷ் ஏரியில் மூழ்கினான். உடன் சென்ற சிறுவர்கள் கூச்சலிட்டனர். அங்கு இருந்தவர்கள் ஓடி வந்து ஏரியில் குதித்து மோனிஷை மீட்டு சிகிச்சைக்காக உத்திரமேரூர் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். சிறுவனை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இது குறித்து உத்திரமேரூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியம் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.
Tags:    

Similar News