செய்திகள்
கடத்தல்

தேன்கனிக்கோட்டை அருகே பிளஸ்-1 மாணவி கடத்தல்

Published On 2021-01-25 20:46 IST   |   Update On 2021-01-25 20:46:00 IST
தேன்கனிக்கோட்டை அருகே பிளஸ்-1 மாணவியை பேக்கரி கடை ஊழியர் கடத்தி சென்று இருப்பது குறித்து அவரது பெற்றோர் போலீசில் புகார் செய்தனர். போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.









தேன்கனிக்கோட்டை:

தேன்கனிக்கோட்டை அருகே கெம்பகரையை சேர்ந்த 15 வயது சிறுமி அந்த பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் பிளஸ்-1 படித்து வருகிறார். கடந்த 22-ந் தேதி இரவு வீட்டில் இருந்து வெளியே சென்ற மாணவி மீண்டும் வீடு திரும்பவில்லை. 

இதுகுறித்து அவருடைய பெற்றோர் தேன்கனிக்கோட்டை அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தனர். இதில் கெம்பகரையை சேர்ந்த பேக்கரி கடை ஊழியர் தங்கராஜ் (37) என்பவர் தனது மகளை கடத்தி சென்று இருக்கலாம் என சந்தேகம் உள்ளதாக கூறியுள்ளனர். அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Similar News