செய்திகள்
விபத்து பலி

கார் மோதி முதியவர் பலி

Published On 2021-01-25 01:12 GMT   |   Update On 2021-01-25 01:12 GMT
கார் மோதி முதியவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆலந்தூர்:

சென்னையை அடுத்த மடிப்பாக்கம் காந்தி நகரை சேர்ந்தவர் சேவியர் (வயது 65). இவர், நங்கநல்லூர் 4-வது மெயின் ரோட்டில் தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த கார் மோதியது. இதில் படுகாயம் அடைந்த சேவியர் பரிதாபமாக இறந்தார்.

இதுபற்றி பரங்கிமலை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

அதேபோல் திருவண்ணாமலையை சேர்ந்த பிரபு (30) மற்றும் அவருடைய நண்பர் பாலாஜி (24) இருவரும் நேற்று கொளத்தூரில் நடக்கும் திருமண வீட்டில் சமையல் வேலைக்கு மோட்டார் சைக்கிளில் வந்தனர்.

பூந்தமல்லி நெடுஞ்சாலையில் செம்பரம்பாக்கம் அருகே வந்தபோது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் பிரபு அதே இடத்தில் பரிதாபமாக இறந்தார். பாலாஜி லேசான காயங்களுடன் உயிர் தப்பினார்.

இதுபற்றி பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Tags:    

Similar News