செய்திகள்
அரியலூரில் மேலும் 5 பேருக்கு கொரோனா
அரியலூர் மாவட்டத்தில் நேற்று 5 பேர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மொத்த எண்ணிக்கை 4,672 ஆக உயர்ந்துள்ளது.
அரியலூர்:
அரியலூர் மாவட்டத்தில் நேற்று 5 பேர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மாவட்டத்தில் கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,672 ஆக உயர்ந்துள்ளது. அவர்களில் 4,600 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். கொரோனாவிற்கு தற்போது 23 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 49 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 330 பேருக்கு கொரோனா மருத்துவ பரிசோதனை முடிவுகள் வரவேண்டியுள்ளது.
பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று புதிதாக யாரும் கொரோனாவினால் பாதிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் மாவட்டத்தில் 221 பேருக்கு கொரோனா மருத்துவ பரிசோதனை எடுக்கப்பட்டுள்ளது.