செய்திகள்
நகை பறிப்பு

செந்துறை அருகே மூதாட்டியிடம் 6 பவுன் நகைகள் பறிப்பு

Published On 2021-01-23 09:14 GMT   |   Update On 2021-01-23 09:14 GMT
செந்துறை அருகே மூதாட்டியிடம் 6 பவுன் நகைகள் பறித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
செந்துறை:

அரியலூர் மாவட்டம், செந்துறை அருகே உள்ள ஈச்சங்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் மீனாட்சி (வயது 88). இவர், வீட்டில் இருந்து தெருவில் நடந்து சென்றபோது மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்ம நபர்கள் மூதாட்டி அணிந்திருந்த சங்கிலி உள்பட 6 பவுன் நகைகளை பறித்துக் கொண்டு தப்பி சென்று விட்டனர். இதுகுறித்த புகாரின்பேரில், தளவாய் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Tags:    

Similar News