செய்திகள்
போச்சம்பள்ளி அருகே பணம் வைத்து சூதாடிய 5 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மத்தூர்:
போச்சம்பள்ளி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மகேந்திரன் மற்றும் போலீசார், ஜம்புகுட்டப்பட்டி பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்குள்ள காளியம்மன் கோவில் பின்புறத்தில் பணம் வைத்து சூதாடிக் கொண்டிருந்த அதே பகுதியை சேர்ந்த பெரியசாமி (வயது 47), முருகன் (36) மணி (25), நந்தகுமார் (37) மணிவண்ணன் (29) ஆகிய 5 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்த பணம் பறிமுதல் செய்யப்பட்டது.