செய்திகள்
வேப்பனப்பள்ளி அருகே கஞ்சா விற்ற முதியவர் கைது
வேப்பனப்பள்ளி அருகே கஞ்சா விற்ற முதியவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேப்பனப்பள்ளி:
வேப்பனப்பள்ளி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சந்துரு மற்றும் போலீசார், தீர்த்தம் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அதேபகுதியை சேர்ந்த மல்லப்பா (வயது66) என்பவர் வீட்டின் பின்புறம் கஞ்சா விற்பனை செய்வதாக தகவல் கிடைத்தது. அதன்போல் போலீசார் அங்கு சென்று சோதனை செய்தபோது மல்லப்பா கஞ்சா விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்த ரூ.15 ஆயிரம் மதிப்பிலான 1½ கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.