செய்திகள்
நர்சிங் மாணவியை கடத்திய டிரைவர் கைது
கடலூர் அருகே நர்சிங் மாணவியை கடத்திய வழக்கில் டிரைவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடலூர்:
கடலூர் புதுப்பாளையத்தை சேர்ந்தவர் சரவணன்(வயது 26), கார் டிரைவர். அதே பகுதியை சேர்ந்தவர் 17 வயதுடைய நர்சிங் மாணவி. சென்னையில் படித்து வந்த மாணவி, பொங்கல் விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்திருந்தார்.
இந்த நிலையில் சம்பவத்தன்று சரவணன், அந்த மாணவியை கடத்தி சென்றதாக தெரிகிறது. இதுபற்றி அறிந்த மாணவியின் தாய், கடலூர் புதுநகர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் எழில்தாசன் வழக்குப்பதிவு செய்து மாணவியை கடத்திய சரவணனை கைது செய்தார். மேலும் கடத்தப்பட்ட மாணவியை போலீசார் மீட்டு, கடலூரில் உள்ள காப்பகத்தில் ஒப்படைத்தனர்.