செய்திகள்
கோப்புபடம்

மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு நிவாரணம் வழங்கக்கோரி கடலூரில், விவசாயிகள் சங்கத்தினர் மனு கொடுக்கும் போராட்டம்

Published On 2021-01-21 13:08 GMT   |   Update On 2021-01-21 13:08 GMT
மழைால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு நிவாரணம் வழங்கக்கோரி கடலூரில் விவசாயிகள் சங்கத்தினர் மனு கொடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கடலூர்:

புயல், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நெல்லுக்கு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும். மணிலா, உளுந்து பயிருக்கு ஏக்கருக்கு ரூ.20 ஆயிரம், கரும்புக்கு ஏக்கருக்கு ரூ.40 ஆயிரம் வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடலூர் தாலுகா அலுவலகத்தில் மனு கொடுக்கும் போராட்டத்தை தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் அறிவித்து இருந்தனர்.

அதன்படி நேற்று மாவட்ட பொருளாளர் தட்சிணாமூர்த்தி தலைமையில் விவசாயிகள் சங்கத்தினர் கடலூர் தாலுகா அலுவலகம் முன்பு திரண்டனர். பின்னர் அவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். இதில் நிர்வாகிகள் பஞ்சாட்சரம், கடவுள், ஆறுமுகம், பழனி, ஒன்றிய செயலாளர் ராஜேந்திரன், பாண்டுரங்கன், அய்யாதுரை, சுந்தரமூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து தாசில்தார் பலராமனிடம் கோரிக்கைகளை மனுவை அளித்து, புயலால் சேதமடைந்த பயிர்களை முழுமையாக கணக்கெடுப்பு நடத்தி, பாதிக்கப்பட்ட அனைத்து விவசாயிகளுக்கும் உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினர். இதை கேட்ட தாசில்தார், பாதிக்கப்பட்ட அனைவருக்கும் விடுபடாமல் நிவாரணம் வழங்கப்படும் என்று உறுதி அளித்தார். இதையடுத்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Tags:    

Similar News