செய்திகள்
கைது

மீன்சுருட்டி அருகே ஆடு திருட முயன்ற 5 வாலிபர்கள் கைது

Published On 2021-01-21 15:20 IST   |   Update On 2021-01-21 15:20:00 IST
அரியலூர் மாவட்டம், மீன்சுருட்டி அருகே ஆடு திருட முயன்ற 5 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
மீன்சுருட்டி:

அரியலூர் மாவட்டம், மீன்சுருட்டி அருகே உள்ள வீரசோழபுரம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் வீரபாண்டியன் (வயது 38). சரக்கு ஆட்டோ டிரைவர். நேற்று முன்தினம் இரவு வீராரெட்டி தெருவில் உள்ள தனது அக்காள் கமலி வீட்டில் இவரும், இவரது தாய் செந்தாமரையும் தூங்கிக் கொண்டு இருந்தனர். அப்போது நள்ளிரவில் ஆடுகளின் சத்தம் கேட்டு அவர்கள் எழுந்து பார்த்தபோது மர்ம நபர்கள் சிலர் ஆடுகளை திருடிக் கொண்டு இருந்தனர். இவர்களை பார்த்ததும் ஆடு திருடும் கும்பல் 2 மோட்டார் சைக்கிள்களில் தப்பி ஓட முயற்சித்தனர். அவர்களைத் துரத்திப் பிடிக்க முயற்சித்தபோது, அவர்களில் ஒருவர் கத்தியை காட்டி வீரபாண்டியனை மிரட்டி விட்டு தப்பி சென்றனர்.

இதுகுறித்து வீரபாண்டியன் கொடுத்த புகாரின்பேரில், மீன்சுருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் மலைச்சாமி வழக்குப்பதிவு செய்து, ஆட்டை திருட முயன்ற ஜெயங்கொண்டம் பகுதியைச் சேர்ந்த பக்ருதீன் (வயது 21), தெற்கு புதுக்குடியை சேர்ந்த ராஜ்குமார் என்கிற படையப்பா (23), தத்தனூர் குடிகாடு கிராமத்தை சேர்ந்த ரஞ்சித்குமார் (22), வாரியங்காவலை சேர்ந்த விஜய் (22), இலையூர் கிராமத்தை சேர்ந்த பூபாலன் (20) ஆகிய 5 வாலிபர்களை கைது செய்தார். அவர்களில் பக்ருதீன் என்பவர், ஏற்கனவே பல்வேறு குற்ற வழக்குகளில் கைது செய்யப்பட்டவர் என்பதும், மாவீரன் மஞ்சள் படையின் ஜெயங்கொண்டம் இளைஞரணி தலைவர் என்பதும் தெரியவந்தது.

Similar News