செய்திகள்
கோப்புபடம்

ஜெயங்கொண்டம் அருகே தூக்குப்போட்டு பெண் தற்கொலை

Published On 2021-01-21 14:55 IST   |   Update On 2021-01-21 14:55:00 IST
ஜெயங்கொண்டம் அருகே தூக்குப்போட்டு பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஜெயங்கொண்டம் :

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் கீழத்தெருவை சேர்ந்தவர் சண்முகம். கூலித் தொழிலாளி. இவரது மனைவி இந்திரா (வயது 30). இவர்களுக்கு 4 வயதில் மைதிலி என்ற பெண் குழந்தை உள்ளது. இந்தநிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் இந்திரா தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படுகிறது. அருகில் உள்ளவர்கள் அவரை மீட்டு ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். 

இதுகுறித்து அவரது தாய் தங்கம்மாள், ஜெயங்கொண்டம் போலீசில் கொடுத்த புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிந்து இந்திரா தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்திராவிற்கு திருமணமாகி 5 ஆண்டுகளே ஆவதால், வரதட்சணை கொடுமை காரணமா? என்று உடையார்பாளையம் வருவாய் கோட்டாட்சியர் மேல் விசாரணை நடத்தி வருகிறார்.

Similar News