செய்திகள்
கைது

உடையார்பாளையம் அருகே மது விற்ற பெண் உள்பட 4 பேர் கைது

Published On 2021-01-20 15:18 GMT   |   Update On 2021-01-20 15:18 GMT
உடையார்பாளையம் அருகே மது விற்ற பெண் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
உடையார்பாளையம்:

அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மாசிலாமணி மற்றும் போலீசார் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது தத்தனூர் கீழவெளியை சேர்ந்த சுப்பிரமணியன்(வயது 62), தத்தனூர் குடிகாட்டை சேர்ந்த உலகநாதன்(45), வானத்திரையான்பட்டிணத்தை சேர்ந்த வெண்ணிலா(40), காடுவெட்டாங்குறிச்சியை சேர்ந்த கோவிந்தசாமி(45) ஆகிய 4 பேரும் மதுபாட்டில்களை பதுக்கி விற்றது தெரியவந்தது. இது குறித்து போலீசார் வழக்குப்பதிந்து 4 பேரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Tags:    

Similar News