செய்திகள்
ஓசூர் அருகே பெண் தூக்குப்போட்டு தற்கொலை
ஓசூர் அருகே பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஓசூர்:
ஓசூர் அருகே கொத்தூரை சேர்ந்தவர் முனிரத்தினம்மா (வயது 45). இவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து மோரனப்பள்ளி கிராம நிர்வாக அலுவலர் ஆர்த்தி ஓசூர் அட்கோ போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அவர் தற்கொலைக்கான காரணம் குறித்து ஓசூர் அட்கோ போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.