செய்திகள்
தற்கொலை

மத்தூர் அருகே தொழிலாளி தீக்குளித்து தற்கொலை

Published On 2021-01-20 07:54 GMT   |   Update On 2021-01-20 07:54 GMT
மத்தூர் அருகே தொழிலாளி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மத்தூர்:

மத்தூர் அருகே உள்ள மாடரஅள்ளியைச் சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 40). கூலித்தொழிலாளி. இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்தது. மேலும் கடன் தொல்லையும் இருந்தது. இதனால் மனமுடைந்த அவர் உடலில் மண்எண்ணெய்யை ஊற்றி தீ வைத்துக் கொண்டார். இதில் உடல் கருகிய செல்வராஜ் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து மத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Tags:    

Similar News