செய்திகள்
திருட்டு

மத்திகிரி அருகே வீட்டின் கதவை உடைத்து நகை, ஸ்கூட்டர் திருட்டு

Published On 2021-01-19 07:05 GMT   |   Update On 2021-01-19 07:05 GMT
வீட்டின் கதவை உடைத்து நகை, ஸ்கூட்டர் திருட்டு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மத்திகிரி:

ஓசூர் தாலுகா மத்திகிரி அருகே கெலமங்கலம் சாலையில் உள்ள ஜொனபண்டாவை சேர்ந்தவர் சாதியா (வயது 37). சம்பவத்தன்று இவர் வீட்டை பூட்டி விட்டு வெளியே சென்றார். அந்த நேரம் அவரது வீட்டிற்கு மர்ம நபர்கள் வந்து கதவை உடைத்து உள்ளே சென்றனர். பின்னர் அவர்கள் பீரோவை திறந்து அதில் வைக்கப்பட்டிருந்த 2 கிராம் தங்க மோதிரம், 50 கிராம் வெள்ளி பொருட்கள், ஒரு ஸ்கூட்டர் ஆகியவற்றை திருடி சென்றனர். இந்த நிலையில் வீடு திரும்பிய சாதியா வீட்டில் நகைகள் திருட்டு போய் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து அவர் மத்திகிரி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Tags:    

Similar News