செய்திகள்
நிவாரணம் வழங்க கோரி வயலில் இறங்கி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி அருகே நீரில் மூழ்கிய நெற்பயிருக்கு நிவாரணம் வழங்க கோரி வயலில் இறங்கி விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மீன்சுருட்டி:
அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி அருகே உள்ள பிள்ளையார்பாளையம் கிராமத்தில் 3 ஆயிரத்து 500 ஏக்கர் பரப்பளவில் நெற்பயிர் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தற்போது பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் நீரில் மூழ்கின. சில வயல்களில் நெற்பயிர்கள் முளைத்து வீணானது.
இந்நிலையில் சேதத்தை அதிகாரிகள் கணக்கெடுத்து ஏக்கருக்கு ரூ.40 ஆயிரம் நிவாரணம் வழங்க கோரி விவசாயிகள் வயலில் இறங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் மகாராஜன் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் தியாகராஜன் மற்றும் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டு கோஷங்களை எழுப்பி, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பொங்கல் பண்டிகையை கொண்டாட வேண்டிய நேரத்தில், தற்போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம் என்று விவசாயிகள் வேதனையுடன் தெரிவித்தனர்.
அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி அருகே உள்ள பிள்ளையார்பாளையம் கிராமத்தில் 3 ஆயிரத்து 500 ஏக்கர் பரப்பளவில் நெற்பயிர் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தற்போது பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் நீரில் மூழ்கின. சில வயல்களில் நெற்பயிர்கள் முளைத்து வீணானது.
இந்நிலையில் சேதத்தை அதிகாரிகள் கணக்கெடுத்து ஏக்கருக்கு ரூ.40 ஆயிரம் நிவாரணம் வழங்க கோரி விவசாயிகள் வயலில் இறங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் மகாராஜன் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் தியாகராஜன் மற்றும் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டு கோஷங்களை எழுப்பி, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பொங்கல் பண்டிகையை கொண்டாட வேண்டிய நேரத்தில், தற்போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம் என்று விவசாயிகள் வேதனையுடன் தெரிவித்தனர்.