செய்திகள்
எஸ்.என்.புரம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட ஸ்டேட் பாங்க் காலனியில் உள்ள சேதமடைந்த சாலை.

சிவகாசி அருகே சாலை சீரமைக்கப்படுமா?

Published On 2021-01-16 00:18 GMT   |   Update On 2021-01-16 00:18 GMT
சிவகாசி அருகே சேதமடைந்த சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சிவகாசி:

சிவகாசி யூனியனுக்கு உட்பட்ட எஸ்.என்.புரம். பஞ்சாயத்தில் ஸ்டேட் பாங்க் காலனி உள்ளது.

இப்பகுதியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ள நிலையில் பொதுமக்கள் பயன்படுத்துவதற்கு போதிய தார் சாலைகள் இல்லை. இதனால் இப்பகுதி மக்கள் தங்கள் குடியிருப்பு பகுதியிலிருந்து நகர பகுதிக்கு வருவதற்கு மிகவும் சிரமப்படுகிறார்கள்.

இதனால் மழைக்காலங்களில் மண் சாலைகள் அனைத்தும் சேறும், சகதியுமாக இருப்பதால் இருசக்கர வாகனங்களில் வரும் நபர்கள் வழுக்கி கீழே விழும் சம்பவம் தொடர்ந்து நடந்து வருகிறது.

இந்த பகுதியில் உள்ள மண் சாலையை, தார் சாலையாக மாற்றி தர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அடிப்படை வசதிகள் இல்லாத இப்பகுதியை சிவகாசி ஒன்றிய அதிகாரிகளும், செங்கமலநாச்சியார்புரம் பஞ்சாயத்து நிர்வாகத்தினரும் ஸ்டேட் பாங்க் காலனி வந்து ஆய்வு செய்து, அப்பகுதி மக்களின் தேவைகளை நிறைவேற்றித் தர வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரி்க்கை விடுத்துள்ளனர்.
Tags:    

Similar News