செய்திகள்
கோபி அருகே வீடுபுகுந்து பெண்ணிடம் 5 பவுன் சங்கிலி பறிப்பு
கோபி அருகே வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் 5 பவுன் சங்கிலியை பறித்து சென்ற கொள்ளையனை போலீசார் தேடி வருகிறார்கள்.
கடத்தூர்:
கோபி அருகே உள்ள கொளப்பலூரை சேர்ந்தவர் விஜயலட்சுமி (வயது 42). நேற்று மதியம் வீட்டில் விஜயலட்சுமி மட்டும் தனியாக இருந்தார். அப்போது மர்ம நபர் ஒருவர் மோட்டார் சைக்கிளில் அங்கு வந்தார். பின்னர் வீட்டுக்குள் வந்து மாட்டுத்தரகர் வீடு இங்கு எங்கு உள்ளது? என்று கேட்டார். விஜயலட்சுமி அதற்கு பதில் சொல்ல முயன்றபோது, அந்த நபர் வெடுக்கென்று விஜயலட்சுமி கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் சங்கிலியை பறித்துக்கொண்டு, மோட்டார் சைக்கிளில் மின்னலாய் மறைந்துவிட்டார். விஜயலட்சுமி திருடன் திருடன் என்று கத்தினார். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவந்தார்கள். ஆனால் கொள்ளையனை பிடிக்க முடியவில்லை.
இதுகுறித்து விஜயலட்சுமி சிறுவலூர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விஜயலட்சுமியிடம் இருந்து தங்கச்சங்கிலியை பறித்துச்சென்ற கொள்ளையனை வலைவீசி தேடி வருகிறார்கள்.
கோபி அருகே உள்ள கொளப்பலூரை சேர்ந்தவர் விஜயலட்சுமி (வயது 42). நேற்று மதியம் வீட்டில் விஜயலட்சுமி மட்டும் தனியாக இருந்தார். அப்போது மர்ம நபர் ஒருவர் மோட்டார் சைக்கிளில் அங்கு வந்தார். பின்னர் வீட்டுக்குள் வந்து மாட்டுத்தரகர் வீடு இங்கு எங்கு உள்ளது? என்று கேட்டார். விஜயலட்சுமி அதற்கு பதில் சொல்ல முயன்றபோது, அந்த நபர் வெடுக்கென்று விஜயலட்சுமி கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் சங்கிலியை பறித்துக்கொண்டு, மோட்டார் சைக்கிளில் மின்னலாய் மறைந்துவிட்டார். விஜயலட்சுமி திருடன் திருடன் என்று கத்தினார். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவந்தார்கள். ஆனால் கொள்ளையனை பிடிக்க முடியவில்லை.
இதுகுறித்து விஜயலட்சுமி சிறுவலூர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விஜயலட்சுமியிடம் இருந்து தங்கச்சங்கிலியை பறித்துச்சென்ற கொள்ளையனை வலைவீசி தேடி வருகிறார்கள்.