செய்திகள்
கோப்புபடம்

விருதுநகர் அருகே ரெயில் மோதி ஒருவர் பலி - யார் அவர்? போலீஸ் விசாரணை

Published On 2021-01-10 12:43 GMT   |   Update On 2021-01-10 12:43 GMT
விருதுநகர் அருகே ரெயில் மோதி ஒருவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருதுநகர்:

விருதுநகர் அருகே உள்ள துலுக்கப்பட்டி மற்றும் சாத்தூர் ரெயில் நிலையங்களுக்கு இடையே 45 வயது மதிக்கத்தக்க நபர் அந்த வழியாக சென்ற ரெயிலில் அடிபட்டு இறந்து உள்ளார். அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்று தெரியவில்லை. 

இறந்த நபர் வெளிர் பச்சை நிறத்தில் கட்டம் போட்ட சட்டை அணிந்து உள்ளார். சட்டையில் பாபி சிவகாசி என்ற தையல் நிறுவன முகவரி உள்ளது. இதுபற்றி தூத்துக்குடி ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Tags:    

Similar News