செய்திகள்
நடிகர் ராதாரவி

ரஜினி அரசியலுக்கு வராததால் பா.ஜ.க.வுக்கு எந்த பாதிப்பும் இல்லை- நடிகர் ராதாரவி பேட்டி

Published On 2021-01-10 07:47 GMT   |   Update On 2021-01-10 07:47 GMT
நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்தாலும், வராவிட்டாலும் பாரதீய ஜனதாவுக்கு எவ்வித பாதிப்பும் இல்லை என்று நடிகர் ராதாரவி கூறியுள்ளார்.

ஊட்டி:

ஊட்டியில் பாரதீய ஜனதா சார்பில் நம்ம ஊரு பொங்கல் நிகழ்ச்சி நடந்தது. இதில் நடிகரும், பாரதீய ஜனதா செயற்குழு உறுப்பினருமான ராதாரவி கலந்து கொண்டு பொங்கல் வைக்கும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.

தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

மத்திய அரசு மக்களுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. பாரதீய ஜனதா நல்ல கட்சி என்பதாலும், இந்த கட்சியில் பிரச்சினைகள் இல்லாததாலும் நடிகர்கள் பாரதீய ஜனதா நோக்கி வருகின்றனர்.

சட்டசபை தேர்தலுக்கு பாரதீய ஜனதா தயாராகி வருகிறது. அ.தி.மு.க. கூட்டணியில் பாரதீய ஜனதா இருக்க வேண்டும் என்பது எனது ஆசை. இருக்குமா, இல்லையா? என்பது குறித்து கட்சி தலைமை தான் முடிவு செய்யும்.

பாரதீய ஜனதாவுக்கு சிறந்த தலைமை மோடி. பாரதீய ஜனதா தமிழகத்தில் பெரும் புரட்சியை ஏற்படுத்தும் என மக்கள் கூறுகின்றனர். தமிழகத்தில் அ.தி.மு.க. தலைமையை பாரதீய ஜனதா ஏற்றுக் கொள்ளும். அவர்கள் அரசியல் அறிந்தவர்கள்.

இரட்டை இலை சின்னத்தை யாராலும் அழிக்க முடியாது. இந்த கூட்டணிக்கு தேர்தலில் மக்களின் அமோக ஆதரவு நிச்சயம் உண்டு.


ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்தாலும், வராவிட்டாலும் பாரதீய ஜனதாவுக்கு எவ்வித பாதிப்பும் இல்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News