செய்திகள்
திருபட்டினத்தில் கஞ்சா விற்ற சிறுவன் உள்பட 3 பேர் கைது
காரைக்காலை அடுத்த திருபட்டினத்தில் கஞ்சா விற்ற சிறுவன் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
காரைக்கால்:
காரைக்காலை அடுத்த திருபட்டினம் போலகம் பகுதியில், கஞ்சா விற்பதாக கிடைத்த தகவலின் பேரில், திரு-பட்டினம் போலீசார், அப்பகுதியில் ரோந்துசென்றபோது 2 பேர் மோட்டார் சைக்கிளில் வைத்து கஞ்சா பொட்டலங்களை விற்றது தெரியவந்தது. இதையடுத்து அவர்களை பிடித்து விசாரித்தபோது, காரைக்கால் கிளிஞ்சல்மேடு கிராமத்தைச் சேர்ந்த பவித்ரா (வயது 21), அதே பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுவன் என்பது தெரியவந்தது.
காரைக்காலை அடுத்த திருபட்டினம் போலகம் பகுதியில், கஞ்சா விற்பதாக கிடைத்த தகவலின் பேரில், திரு-பட்டினம் போலீசார், அப்பகுதியில் ரோந்துசென்றபோது 2 பேர் மோட்டார் சைக்கிளில் வைத்து கஞ்சா பொட்டலங்களை விற்றது தெரியவந்தது. இதையடுத்து அவர்களை பிடித்து விசாரித்தபோது, காரைக்கால் கிளிஞ்சல்மேடு கிராமத்தைச் சேர்ந்த பவித்ரா (வயது 21), அதே பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுவன் என்பது தெரியவந்தது.
நாகப்பட்டினம் தேவேந்திரன் (35) என்பவரிடம் கஞ்சா பொட்டலங்களை வாங்கி வந்து காரைக்காலில் விற்றதை அவர்கள் ஒப்புகொண்டனர். அவர்களது தகவலின்பேரில் தேவேந்திரனை கைது செய்து, விசாரித்தபோது, நாகப்பட்டினம் சிந்தாமணி, வீரையன் ஆகிய 2 பேர் கஞ்சா வழங்கியதை ஒப்புகொண்டார்.
அதன்பேரில், வழக்கு பதிவு செய்து, பவித்ரா, தேவேந்திரன் மற்றும் 17 வயது சிறுவனையும் கைது செய்த போலீசார், சிந்தாமணி, வீரையனை தேடி வருகின்றனர். கைதானவர்களை மாவட்ட கோர்ட்டில் ஆஜர்படுத்தி நீதிபதி செந்தமிழ்ச்செல்வன் உத்தரவின்பேரில் காலாப்பட்டு சிறையில் போலீசார் அடைத்தனர்.