செய்திகள்
கோப்புபடம்

வேப்பனப்பள்ளி அருகே பள்ளி மாணவி கடத்தல் - கட்டிட மேஸ்திரி மீது வழக்கு

Published On 2021-01-09 15:54 IST   |   Update On 2021-01-09 15:54:00 IST
வேப்பனப்பள்ளி அருகே பள்ளி மாணவி கடத்தப்பட்ட சம்பவம் குறித்து கட்டிட மேஸ்திர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
கிருஷ்ணகிரி;

வேப்பனப்பள்ளி அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்தவர் 14 வயது சிறுமி. இவர் அங்குள்ள பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார். மாணவியை கடந்த 1-ந் தேதி முதல் காணவில்லை. இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் கிருஷ்ணகிரி அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தனர். 

அதில் தனது மகளை வேப்பனப்பள்ளியை அடுத்த குட்டப்பள்ளி கிராமத்தை சேர்ந்த கட்டிட மேஸ்திரி சுரேஷ்குமார் (வயது 22) என்பவர் திருமணம் செய்யும் நோக்கில் கடத்தி சென்றுள்ளார். அவரிடமிருந்து தனது மகளை மீட்டு தர வேண்டும் என அதில் தெரிவித்துள்ளனர். அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சவிதா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Similar News