செய்திகள்
வரத்து அதிகரிப்பால் காய்கறி விலை குறைந்தது- விவசாயிகள் பாதிப்பு
வெளியிடங்களில் இருந்து வரத்து அதிகரிப்பால் நீலகிரி மாவட்டத்தில் விளையும் காய்கறிவிலை குறைந்தது. இதனால் விவசாயிகள் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
ஊட்டி:
நீலகிரி மாவட்டத்தில் கேரட், பீட்ரூட், உருளைக்கிழங்கு, முட்டைகோஸ், காலிபிளவர், முள்ளங்கி, புரூக்கோலி, பூண்டு போன்ற மலை காய்கறிகள் அதிகளவில் விளைவிக்கப்படுகிறது.
இதற்கிடையே வெளிமாநிலங்களில் இருந்து நீலகிரி மாவட்டத்துக்கு மலைக்காய்கறிகள் விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது. இதனால் உள்ளூரில் காய்கறிகள் விலை வெகுவாக குறைந்து உள்ளது. இதுகுறித்து வியாபாரிகள் கூறியதாவது:-
ஓசூர், தாளவாடி, ஒட்டன்சத்திரம், பெங்களூரு, மைசூர், டெல்லி உள்ளிட்ட இடங்களில் இருந்து பீன்ஸ், பஜ்ஜி மிளகாய், பட்டாணி, புரூக்கோலி, பூண்டு, கேரட் ஊட்டிக்கு டன் கணக்கில் விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது. இதனால் இங்கு சாகுபடி செய்யப்படும் காய்கறிகளின் விலை வெகுவாக குறைந்து விட்டது.
குறிப்பாக புரூக்கோலி ஒரு கிலோ ரூ.200 முதல் ரூ.250 வரை விற்பனை யானது. ஆனால் அது தற்போது ரூ.20 முதல் ரூ.25 வரை மட்டுமே விற்கப்படுகிறது. நீலகிரியில் விளையும் காய்கறிகளுக்கு என்று தனி மவுசு உள்ளது. ஆனால் வெளியிடங்களில் இருந்து காய்கறிகள் அதிகம் வருவதால் உள்ளூரில் விளைவிக்கும் காய்கறிகளின் விலை குறைந்து விட்டது.
தற்போது ஒரு கிலோ பீன்ஸ் ரூ.20 முதல் ரூ.25, உருளைக்கிழங்கு ரூ.37, முள்ளங்கி ரூ.10, பீட்ரூட் ரூ.38, பட்டாணி ரூ.60, கேரட் ரூ.12-க்கு விற்பனை யாகிறது. இதனால் காய்கறிகளை சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு போதிய வருமானம் இல்லாததால் விவசாயிகள் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
நீலகிரி மாவட்டத்தில் கேரட், பீட்ரூட், உருளைக்கிழங்கு, முட்டைகோஸ், காலிபிளவர், முள்ளங்கி, புரூக்கோலி, பூண்டு போன்ற மலை காய்கறிகள் அதிகளவில் விளைவிக்கப்படுகிறது.
இதற்கிடையே வெளிமாநிலங்களில் இருந்து நீலகிரி மாவட்டத்துக்கு மலைக்காய்கறிகள் விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது. இதனால் உள்ளூரில் காய்கறிகள் விலை வெகுவாக குறைந்து உள்ளது. இதுகுறித்து வியாபாரிகள் கூறியதாவது:-
ஓசூர், தாளவாடி, ஒட்டன்சத்திரம், பெங்களூரு, மைசூர், டெல்லி உள்ளிட்ட இடங்களில் இருந்து பீன்ஸ், பஜ்ஜி மிளகாய், பட்டாணி, புரூக்கோலி, பூண்டு, கேரட் ஊட்டிக்கு டன் கணக்கில் விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது. இதனால் இங்கு சாகுபடி செய்யப்படும் காய்கறிகளின் விலை வெகுவாக குறைந்து விட்டது.
குறிப்பாக புரூக்கோலி ஒரு கிலோ ரூ.200 முதல் ரூ.250 வரை விற்பனை யானது. ஆனால் அது தற்போது ரூ.20 முதல் ரூ.25 வரை மட்டுமே விற்கப்படுகிறது. நீலகிரியில் விளையும் காய்கறிகளுக்கு என்று தனி மவுசு உள்ளது. ஆனால் வெளியிடங்களில் இருந்து காய்கறிகள் அதிகம் வருவதால் உள்ளூரில் விளைவிக்கும் காய்கறிகளின் விலை குறைந்து விட்டது.
தற்போது ஒரு கிலோ பீன்ஸ் ரூ.20 முதல் ரூ.25, உருளைக்கிழங்கு ரூ.37, முள்ளங்கி ரூ.10, பீட்ரூட் ரூ.38, பட்டாணி ரூ.60, கேரட் ரூ.12-க்கு விற்பனை யாகிறது. இதனால் காய்கறிகளை சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு போதிய வருமானம் இல்லாததால் விவசாயிகள் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.