செய்திகள்
கைது

லத்தேரி அருகே முன்னாள் ராணுவவீரர் கொலை வழக்கில் மேலும் 3 பேர் கைது

Published On 2021-01-07 06:38 GMT   |   Update On 2021-01-07 06:38 GMT
லத்தேரி அருகே சொத்து தகராறில் முன்னாள் ராணுவவீரரை கொலை செய்த வழக்கில் மேலும் 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
காட்பாடி:

லத்தேரியை அடுத்த கிழ்முட்டுக்கூர் எல்.என்.புரம் கொல்லைமேடு பகுதியை சேர்ந்தவர்கள் தாமோதரன் (வயது 70), கிருஷ்ணன் (65). அண்ணன், தம்பிகளான இருவருக்கும் இடையே சொத்து தகராறு இருந்து வந்தது. கிருஷ்ணன் முன்னாள் ராணுவ வீரர். இந்த நிலையில் கடந்த ஜூன் மாதம் தாமோதரனும் அவருடைய மகன்களும், பேரன்களும், பொது இடத்தில் கிருஷ்ணன் கட்டிய தண்ணீர் ஏற்றும் அறையை இடித்த போது கிருஷ்ணன் தட்டிக்கேட்டுள்ளார்.

ஆத்திரமடைந்த தாமோதரன் கும்பல் கிருஷ்ணனை தடியாலும், கல்லாலும் தாக்கியுள்ளனர். தடுக்க வந்த அவருடைய மனைவி சின்னம்மாவையும் தாக்கி விட்டு தப்பி ஓடி விட்டனர். இதில் கிருஷ்ணன் இறந்துவிட்டார்.

இதுகுறித்து பனமடங்கி போலீசார் வழக்கு பதிவு செய்து கிருஷ்ணனின் அண்ணன் தாமோதரன், அவருடைய மகன்கள் முருகன் (50), காந்தி (45), பாஸ்கர் (39) ஆகியோரை கைது செய்தனர்.

தலைமறைவாக இருந்த முருகனின் மகன்கள் மோகன்ராஜ் (26), சரண்ராஜ் (22), நவீன்ராஜ் (20) ஆகிய 3 பேர் 6 மாதங்களுக்கு பிறகு நேற்று முன்தினம் போலீசார் கைது செய்தனர்.
Tags:    

Similar News