செய்திகள்
கோப்புப்படம்

விருதுநகர் மாவட்டத்தில் மேலும் 9 பேருக்கு கொரோனா

Published On 2021-01-06 07:38 IST   |   Update On 2021-01-06 07:38:00 IST
மாவட்டத்தில் மேலும் 9 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள நிலையில் பரிசோதனை முடிவுகள் தொடர்ந்து தாமதமாகும் நிலை உள்ளது.
விருதுநகர்:

விருதுநகர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 3 லட்சத்து 63 ஆயிரத்து 541 பேருக்கு மருத்துவ பரிசோதனை செய்ததில் 16,399 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருந்தது.

105 பேர் அரசு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். வீடுகளில் யாரும் தனிமைப்படுத்தப்படவில்லை. 16,065 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர்.

1,705 பேருக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் 2, 600-க்கும் மேற்பட்டவர்களுக்கு பரிசோதனை முடிவுகள் தெரிவிக்கப்படாத நிலையில் உள்ளது.

மாவட்டத்தில் நேற்று 9 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 16,508 ஆக உயர்ந்துள்ளது.

மாவட்ட சுகாதாரத்துறை பரிசோதனை முடிவுகளை விரைவுபடுத்த நடவடிக்கை எடுக்காத நிலை தொடர்கிறது. பரிசோதனை முடிவுகள் தாமதப்படுத்தபடுவதால் நோய் பாதிப்பு எண்ணிக்கையும் அதிகரிக்கும் நிலை ஏற்படுகிறது. ஆனாலும் மாவட்டத்தில் நோய் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த போதிய அக்கறை காட்டாத நிலையில் மாவட்ட நிர்வாகம் அதற்கான நடவடிக்கைகளை எடுக்க சம்பந்தப்பட்ட துறையினருக்கு உரிய அறிவுறுத்தல் வழங்க வேண்டும் என கோரப்பட்டுள்ளது.

Similar News