செய்திகள்
சேத்தூரில் நெல் கொள்முதல் நிலையம் திறக்க வேண்டும் - விவசாயிகள் கலெக்டரிடம் மனு
சேத்தூரில் நெல் கொள்முதல் நிலையம் திறக்க வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் கலெக்டரிடம் மனு அளித்துள்ளனர்.
விருதுநகர்:
சேத்தூர் பகுதி விவசாயிகள் கலெக்டரிடம் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:-
சேத்தூர், முத்துசாமிபுரம், மேட்டுப்பட்டி, சோலைசேரி ஆகிய கிராமங்களில் 2000 ஏக்கர் நிலப்பரப்பில் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. எனவே சேத்தூரிலேயே நெல் கொள்முதல் நிலையம் திறந்தால் விவசாயிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும். எனவே சேத்தூரில் நெல் கொள்முதல் நிலையம் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.