செய்திகள்
கோப்புப்படம்

விருதுநகர் மாவட்டத்தில் மேலும் 14 பேருக்கு கொரோனா

Published On 2021-01-05 07:45 IST   |   Update On 2021-01-05 07:45:00 IST
விருதுநகர் மாவட்டத்தில் மேலும் 14 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
விருதுநகர்:

விருதுநகர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 3 லட்சத்து 60 ஆயிரத்து 786 பேருக்கு மருத்துவ பரிசோதனை செய்ததில் 16,385 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது.

இதில் 16,049 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். 2,660 பேரின் மருத்துவ பரிசோதனை முடிவுகள் அறிவிக்கப்படவில்லை.

மாவட்டத்தில் நேற்று மேலும் 14 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 16,399ஆக உயர்ந்துள்ளது.

107 பேர் அரசு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். வீடுகளில் யாரும் தனிமைப்படுத்தப்படவில்லை. 996 பேருக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் 2,600-க்கும் மேற்பட்டோரின் மருத்துவ பரிசோதனை முடிவுகளை தெரிவிக்காத நிலையில் உள்ளது.

தொடர்ந்து மாவட்டத்தில் பரிசோதனை முடிவுகள் அறிவிப்பதில் தாமதம் ஏற்பட்டு வரும் நிலையில் அதனை விரைவுபடுத்த மாவட்ட நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலை உள்ளது.

இதனால் நோய் பரவல் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

பரிசோதனை முடிவுகளை விரைந்து அறிவிக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுப்பதுடன் நகர்புறங்களில் பொது இடங்களில் கிருமி நாசினி தெளித்து தூய்மைப்படுத்த உள்ளாட்சி அமைப்புகளுக்கு உரிய அறிவித்தல் வழங்க வேண்டும் என கோரப்பட்டுள்ளது.

Similar News