செய்திகள்
கோப்புப்படம்

1 முதல் 12-ம் வகுப்பு வரை புதுச்சேரியில் பள்ளிகள் திறப்பு

Published On 2021-01-05 05:24 IST   |   Update On 2021-01-05 05:24:00 IST
புதுச்சேரியில் பள்ளிகள் மீண்டும் வழக்கம்போல் எப்போது செயல்படும் என எதிர்பார்த்து வந்தநிலையில் 1 முதல் 12-ம் வகுப்பு வரை பள்ளிகள் அனைத்தும் நேற்று திறக்கப்பட்டன.
புதுச்சேரி:

கொரோனா தொற்று பரவலால் கடந்த மார்ச் மாத இறுதியில் புதுச்சேரியில் பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்டன. கொரோனா பாதிப்புகள் குறையத்தொடங்கியதும் படிப்படியாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டது. கடந்த அக்டோபர் மாதம் 9 முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு சுழற்சி முறையில் வகுப்புகள் செயல்பட்டு வந்தன. பள்ளிகள் மீண்டும் வழக்கம்போல் எப்போது செயல்படும் என எதிர்பார்த்து வந்தநிலையில் பள்ளிகள் அனைத்தும் நேற்று திறக்கப்பட்டன.

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக பள்ளிக்கூட வளாகங்களில் மாணவர்களுக்கு உடல் வெப்ப பரிசோதனை செய்ததுடன் கிருமி நாசினி வழங்கப்பட்டது. வகுப்பறைகளில் சமூக இடைவெளியுடன் அமர வைக்கப்பட்டனர். ஆசிரியர்கள் மாணவர்களை கட்டாயம் முககவசம் அணியவும் தொடர்ந்து அறிவுறுத்தினர். பெரும்பாலான பள்ளிகளில் 50 முதல் 80 சதவீதம் வரை மாணவர்கள் வருகை தந்தனர்.

Similar News