செய்திகள்
குன்றத்தூர் அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதல்- வாலிபர் பலி
குன்றத்தூர் அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதிக் கொண்ட விபத்தில் வாலிபர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
பூந்தமல்லி:
திருவல்லிக்கேணியை சேர்ந்தவர் பூமாதேவன் (வயது 33). இவரது நண்பர் கார்த்திக் (33). இவர்கள் இருவரும் நேற்று முன்தினம் இரவு தாம்பரத்தில் இருந்து மதுரவாயல் நோக்கி தாம்பரம் - மதுரவாயல் பைபாஸ் சாலையில் சென்று கொண்டிருந்தனர். குன்றத்தூர் அருகே சாலையோரம் நின்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் மீது எதிர்பாராத விதமாக இந்த மோட்டார் சைக்கிள் மோதியதில் இருவரும் தூக்கி வீசப்பட்டனர்.
இதில் பூமாதேவன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்து போனார். கார்த்திக் பலத்த காயங்களுடன் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
இது குறித்து பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆதம்பாக்கத்தை சேர்ந்த அபிஷேக் (21) என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.