செய்திகள்
கோப்புபடம்

போலியாக கலப்பு திருமண சான்றிதழ் கொடுத்து பணியில் சேர்ந்த ஆசிரியை மீது வழக்கு

Published On 2021-01-02 14:40 IST   |   Update On 2021-01-02 14:40:00 IST
ஊத்தங்கரை அருகே போலியாக கலப்பு திருமண சான்றிதழ் கொடுத்து பணியில் சேர்ந்த ஆசிரியை மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஊத்தங்கரை:

ஊத்தங்கரையை சேர்ந்தவர் சிவக்குமார். இவருடைய மனைவி சுதா (வயது 35). இவர் 2010-ம் ஆண்டு கலப்பு திருமண சான்று பெற்று 2014-ல் கணினி ஆசிரியராக பணி நியமன ஆணை பெற்றார். கல்வி அலுவலர்கள் ஆசிரியர்களின் சான்றிதழ்களை சோதனை செய்தபோது சுதா போலி கலப்பு திருமண சான்று கொடுத்து பணியில் சேர்ந்தது தெரியவந்தது. 

இதையடுத்து போலி சான்றிதழ் கொடுத்து பணியில் சேர்ந்த கணினி ஆசிரியை சுதா பணி இடை நீக்கம் செய்யப்பட்டார். ஆசிரியை மீது கல்வி அலுவலர்கள் சிங்காரப்பேட்டை போலீசில் புகர் செய்தனர். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் குமரன், ஆசிரியை மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Similar News