செய்திகள்
வேப்பனப்பள்ளி அருகே இளம்பெண் தற்கொலை
வேப்பனப்பள்ளி அருகே குடும்ப தகராறில் இளம்பெண் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
வேப்பனப்பள்ளி:
வேப்பனப்பள்ளி அருகே உள்ள நேரலகிரி கல்லுக்குட்டை கிராமத்தை சேர்ந்தவர் சுரேஷ். இவருடைய மனைவி சுமதி (வயது 20). இவர்களுக்கு திருமணமாகி 2 ஆண்டுகள் ஆகிறது. ஒரு வயதில் பெண் குழந்தை உள்ளது.
இந்த நிலையில் கணவன், மனைவிக்கிடையே அடிக்கடி குடும்ப தகராறு இருந்து வந்துள்ளது. நேற்று முன்தினம் மீண்டும் அவர்களுக்குள் குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்த சுமதி, வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து சுமதியின் தந்தை மாதேஷ் வேப்பனப்பள்ளி போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில், கிருஷ்ணகிரி துணை போலீஸ் சூப்பிரண்டு சரவணன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.