செய்திகள்
கோப்புபடம்

ஸ்ரீபெரும்புதூர் அருகே மோட்டார் சைக்கிள்- கார் மோதல்: ஆட்டோ டிரைவர் பலி

Published On 2020-12-31 11:16 GMT   |   Update On 2020-12-31 11:16 GMT
ஸ்ரீபெரும்புதூர் அருகே மோட்டார் சைக்கிள்- கார் மோதிய விபத்தில் ஆட்டோ டிரைவர் பரிதாபமாக இறந்தார்.
ஸ்ரீபெரும்புதூர்:

காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த பீமன்தாங்கள் மதுரை அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் லோகிதாஸ் (வயது 47). ஆட்டோ டிரைவர். அதே பகுதியை சேர்ந்தவர் செல்வம் (50). கட்டுமான பணி செய்து வந்தார். உறவினர்களான லோகிதாசும், செல்வமும் நேற்று மோட்டார் சைக்கிளில் பீமந்தாங்களில் இருந்து ஸ்ரீபெரும்புதூர் நோக்கி சென்றனர்.

சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையை கடந்த போது சென்னை நோக்கி சென்ற கார் லோகிதாஸ் சென்ற மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது.

இ்தில் மோட்டார் சைக்கிளில் சென்ற இருவரும் தூக்கி வீசப்பட்டனர். இதில் படுகாயம் அடைந்த லோகிதாஸ் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடி துடித்து பரிதாபமாக இறந்தார். உடன் சென்ற செல்வம் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடினர். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு ஸ்ரீபெரும்புதூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு செல்வத்துக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து தகவல் அறிந்த ஸ்ரீபெரும்புதூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணகுமார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விபத்தில் பலியான லோகிதாசின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீபெரும்புதூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்து ஏற்படுத்தி விட்டு தப்பிச்சென்ற கார் டிரைவரை தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News