செய்திகள்
ஓசூர் அருகே கார் மோதி தொழிலாளி பலி
ஓசூர் அருகே கார் மோதி தொழிலாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஓசூர்:
ஓசூர் பார்வதி நகரைச் சேர்ந்தவர் சக்தி (வயது 35). கூலித்தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் மொபட்டில் கிருஷ்ணகிரி-ஓசூர் சாலையில் சீதாராம்மேடு அருகில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக சென்ற கார் மொபட் மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த சக்தி சம்பவ இடத்திலேயே பலியானார். இந்த விபத்து குறித்து ஓசூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.