செய்திகள்
கைது

சாத்தூர் அருகே மது விற்ற 2 பேர் கைது

Published On 2020-12-29 18:45 IST   |   Update On 2020-12-29 18:45:00 IST
சாத்தூர் அருகே மது விற்ற 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சாத்தூர்:

சாத்தூர் டவுன் போலீஸ் சப்இன்ஸ்பெக்டர் செய்யது இப்ராஹீம் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சாத்தூர் அருகே வீரபாண்டியாபுரம் பஸ் ஸ்டாப் பின்புறம் வைத்து மதுபாட்டில் விற்று கொண்டிருந்த சாத்தூரை சேர்ந்த முத்துராஜ் (வயது36) என்பவரிடம் இருந்து 8 மதுபாட்டில்களும், சாத்தூர் நகராட்சி ஆட்டுசந்தை அருகே மதுபாட்டில் விற்ற வெம்பக்கோட்டையை சேர்ந்த ஜெயராமன் (52) அவரிடம் இருந்து 8 மதுபாட்டில்களையும் பறிமுதல் செய்து அவர்கள் 2 பேரையும் கைது செய்தனர்.

Similar News