செய்திகள்
மின்தடை

விருதுநகரில் நாளை மின்தடை

Published On 2020-12-28 05:00 GMT   |   Update On 2020-12-28 09:08 GMT
விருதுநகரில் நாளை பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் நிறுத்தப்படுகிறது.
விருதுநகர்:

விருதுநகர் உள்ளரங்கு துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் இந்த துணை மின் நிலையத்தில் இருந்து மின் வினியோகம் பெறும் ராமமூர்த்தி ரோடு, அம்பேத்கர் தெரு, கஸ்தூரிபாய் ரோடு, ரோசல்பட்டி ரோடு, கம்மாபட்டி, சத்தியமூர்த்தி தெரு, பாண்டியன் நகர், பட்டேல் ரோடு, ஏ.ஏ. ரோடு, பேராளி ரோடு, ஸ்டேட் பாங்க் காலனி, அழகர் சாமி தெரு, தந்தி மரத்தெரு, சாஸ்திரி நகர், ரெயில்வே பீடர் ரோடு, மெயின் பஜாரில் தெப்பம் வரை, காசுக்கடை தெரு, காந்திபுரம் தெரு ஆகிய பகுதிகளில் நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்வினியோகம் இருக்காது என என்ஜினியர் அகிலாண்டேஸ்வரி கூறினார். 

அதேபோல மல்லாங்கிணறு துணை மின் நிலையத்தில் இருந்து மின் வினியோகம் பெறும் மல்லாங்கிணறு, வலையங்குளம், நந்தி குண்டு, மேல துலுக்கன்குளம், அழகியநல்லூர், கெப்பிலிங்கம்பட்டி, வில்லிபத்திரி, நாகம்பட்டி, வழுக்கலொட்டி ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம்நிறுத்தப்படும் என மின்வாரிய நிர்வாகம் தெரிவித்துள்ளது.
Tags:    

Similar News