செய்திகள்
சாத்தூர் அருகே கஞ்சா விற்ற 3 பேர் கைது
சாத்தூர் அருகே கஞ்சா விற்ற 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சாத்தூர்:
சாத்தூர் அமீர்பாளையம் மற்றும் பூங்கா பகுதிகளில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் சாத்தூர் துணை போலீஸ் சூப்பிரண்டு ராமகிருஷ்ணன் உத்தரவின் பேரில் சாத்தூர் டவுன் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செய்யது இப்ராஹீம் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சாத்தூர் பைபாஸ் ரோட்டில் உள்ள நகராட்சி பூங்கா அருகில் கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்த 3 நபர்களை பிடித்து விசாரணை செய்ததில் அவர்கள் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை சேர்ந்த வீரபாஸ்கர் (வயது22) , பொன்ராஜ் (30) மற்றும் சாத்தூர் அருகே சடையம்பட்டியை சேர்ந்த மாரிமுத்து (26) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்களிடம் இருந்து 500 கிராம் கஞ்சாவை சாத்தூர் டவுன் போலீசார் பறிமுதல் செய்து அவர்கள் 3 பேரையும் கைது செய்தனர்.