செய்திகள்
முககவசம்

முககவசம் அணியாத 20 சுற்றுலா பயணிகளுக்கு அபராதம்

Published On 2020-12-26 05:38 IST   |   Update On 2020-12-26 05:38:00 IST
ஊட்டியில் முககவசம் அணியாத 20 சுற்றுலா பயணிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
ஊட்டி:

ஊட்டி நகராட்சி ஆணையாளர் சரஸ்வதி அறிவுரையின்பேரில் சுகாதார ஆய்வாளர் மகாராஜன் மற்றும் அதிகாரிகள் நேற்று ஊட்டி தாவரவியல் பூங்கா முன்பு சுற்றுலா பயணிகள் முககவசம் அணிந்து உள்ளார்களா? என்று சோதனை நடத்தினர். அப்போது முககவசம் அணியாமல் இருந்த 20 சுற்றுலா பயணிகளுக்கு தலா ரூ.200 அபராதம் விதித்து வசூலிக்கப்பட்டது. வாகனங்களில் வருபவர்கள், சுற்றுலா மையங்களுக்கு நடந்து செல்கிறவர்கள் கட்டாயம் முகக்கவசத்தை சரியான முறையில் அணிய வேண்டும் என்று அதிகாரிகள் அறிவுறுத்தினர்.

Similar News